குளித்தலை: நங்கவரம், மருதூர் டவுன் பஞ்., கிராமங்களில், கதிர் அடிக்கும் களம் அமைக்க, கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., பகுதியில், 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், 18 வார்டுகள் உள்ளன. மருதூர் டவுன் பஞ்., பகுதியில், 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், 15 வார்டுகள் உள்ளன. இரண்டு டவுன் பஞ்., பகுதி முழுக்க, விவசாயம் சார்ந்த கிராமங்களாக உள்ளன. பஞ்., கதிர் அடிக்கும் களம் அமைக்கப்பட்டு, விவசாயிகள் மற்றும் பொது மக்கள் களத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல், நங்கவரம் மற்றும் மருதூர் டவுன் பஞ் கிராமங்களில், கதிர் அடிக்கும் களம் அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE