கரூர்: கரூர் மாவட்டத்தில், நேற்று மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று, உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நேற்று வரை, 5,191 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில், 5,055 பேர் சிகிச்சைக்கு பிறகு, பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 86 பேர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று புதிதாக கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, மூன்று பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதுவரை, 50 பேர் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE