குளித்தலை: குளித்தலை நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை, பழைய குப்பை கிடங்கில் கொட்டி தீ வைப்பதால், பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குளித்தலை நகராட்சியில், 24 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்பட்டு வந்த குப்பையை, கரூர் திருச்சி நெடுஞ்சாலை, பெரியார் நகரில் சேகரிக்கப்பட்டு வந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, சத்தியமங்கலம் கிராமத்தில், 10 ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக நிலம் வாங்கி, நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை, இங்கு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக, நகராட்சி பகுதியில் சேகரிக்ப்பட்டு வரும் குப்பையை, பழைய குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இரவு நேரங்களில் குப்பைக்கு, தீயிட்டு எரிப்பதால் புகை மண்டலமாக மாறி வருகிறது. இதனால், முதியோர், குழந்தைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம், பழைய குப்பை கிடங்கில் குப்பை கொட்டுவதை தடுத்து, சத்தியமங்கலத்தில் உள்ள திடக்கழிவு கிடங்கில் கொட்டி, தரம் பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE