கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை, புதிய கட்டளை வாய்க்கால் படித்துறை, மிகவும் மோசமாக இருந்து வருகிறது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனூர் காவிரி ஆற்றில் பிரிந்து, பெட்டவாய்த்தலை வரை லாலாப்பேட்டை வழியாக, வாய்க்கால் செல்கிறது. வாய்க்காலில் மக்கள் குளிப்பதற்காக, படித்துறை கட்டப்பட்டுள்ளது. இந்த படிகள் தற்போது, சிதலமடைந்து மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இதனால், வாய்க்காலில் நின்று குளிக்க முடியாத நிலை உள்ளது. ஆகையால் படித்துறை படிகளை, சரி செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE