நாகர்கோவில்: குமரி மாவட்டம், வில்லுக்குறி அருகே வெள்ளச்சிவிளையில், 'கேப் இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல்' கல்லுாரி செயல்படுகிறது. கல்லுாரிக்கு உரிய அங்கீகாரம் இல்லை என மாணவியர், கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். டிச., 31ல், 11 மாணவியர், தங்கள் சான்றிதழ்களை கேட்டபோது, கல்லுாரி தாளாளர் ஆன்டோ செல்வகுமார், முதல்வரான அவரது மனைவி செல்வராணி ஆகியோர் மிரட்டியதாக, இரணியல் போலீசில் புகார் செய்தனர். மேலும் மாணவியரின் குளியலறையை எட்டி பார்ப்பதாக, இருவர் மீதும் உடன்குடி மாணவி புகார் அளித்தார். இரணியல் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE