புதுடில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்தை தோல்வியில் முடிந்தது.
மத்திய அரசின், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லைப் பகுதியில், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநில விவசாயிகள், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, மத்திய அரசு, இதுவரை 6 கட்டங்களாக தொடர் பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இதுவரை நடந்த பேச்சுகளில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
![]()
|
இதையடுத்து, இன்று மீண்டும் பேச்சு நடந்தது.இதில் குறைந்த பட்ச ஆதாரவிலை தொடர்பாக மத்திய அரசு தரப்பில் பல்வேறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் எந்தவித முன்னேற்றமும்,சுமூக தீர்வும் எட்டப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து மீ்ண்டும் வரும் 8-ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE