'ஆடுகள் பாவம்!'
ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகேயுள்ள குருமந்துாரில், இலவச ஆடுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. விழா மேடை முன் ஆடுகளுடன், பயனாளிகள் நிறுத்தி வைக்கப்பட்டனர். பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், 'சத்துணவு திட்டத்தை, எம்.ஜி.ஆர்., ஏற்படுத்தினார்...' என்றதும், மேடையை சுற்றி நின்றோர் கை தட்டினர். இதனால் குஷியான அமைச்சர், 'கை தட்டினால், ஆடுகள் ஓடிவிடும்... எனவே கை தட்டாதீர்... ஆட்டின் கயிற்றை, பயனாளி உறுதியாக பிடித்துக் கொள்ள வேண்டும்...' என்றார்.அங்கிருந்த பயனாளி ஒருவர், 'அரசியல்வாதியின் பேச்சை கேட்கணும் என்பது, எங்கள் தலையெழுத்து... ஆனால், ஆடுகள் என்ன பாவம் செய்தன... அதாவது, தப்பிச்சு ஓடட்டுமே...' என்றதும்,
சுற்றியிருந்தோர் 'கலகல' வென சிரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE