சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், ஏழு மாவட்டங்களில், இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக,சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மைய இயக்குனர் புவியரசன் பேட்டி:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வடக்கு கடலோர மாவட்டங்களில், பல இடங்களில், இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், கள்ளக்குறிச்சி, அரியலுார் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், தேனி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.அதிகபட்சம், 29; குறைந்தபட்சம், 24 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், திருத்துறைப்பூண்டி, தலைஞாயிறில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது. அதிராம்பட்டினம், பரங்கிப்பேட்டை, அறந்தாங்கி, திருப்பூண்டி, 4; வேப்பூர், திருவாடானை, செய்யூர், திண்டிவனம், 3; வந்தவாசி, காரியாபட்டி, உசிலம்பட்டி, ஜெயங்கொண்டம், கொடைக்கானல், 2 செ.மீ., மழை பெய்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE