ராமேஸ்வரம் : டிச., 14ல் ராமேஸ்வரத்தில் இருந்து, மீன் பிடிக்க சென்ற மீனவர்களில், நான்கு படகில் இருந்த, 29 மீனவர்களை, இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து, காங்கேசன் துறைமுகம், இரணதீவு கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
மீனவர்களை விடுவிக்க கோரி, டிச., 16 முதல், ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். டிச., 30ல் மீனவர்கள் பிரச்னை குறித்து, இருநாடு அதிகாரிகளிடையே பேச்சு நடந்தது. இந்நிலையில், நீதிமன்ற வாய்தா நாளான நேற்று, மீனவர்கள் 29 பேரையும் ஜன., 13 வரை தனிமையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டதால், மீனவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE