ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட மக்கள் சட்ட உரிமைகள்கழகம் சார்பில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடந்தது.
மேற்கு மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் ஹாஜா முகைதீன் ரத்ததானம் வழங்கி துவக்கி வைத்தார். துணை செயலாளர் கண்ணன் வரவேற்றார்.26 முறை ரத்ததானம் செய்த நாகூர் கனி, 25 முறை தானம் வழங்கிய தீபன் சக்ரவர்த்தி கவுரவிக்கப்பட்டனர். 15க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். பசுமை புரட்சி அமைப்பாளர் சந்தானம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர் அய்யப்பன் செய்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE