கோவை:கோவை வக்கீல் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் வக்கீல்களில், இசைத்துறையில் திறமைபெற்ற பாடகர், பாடகியர், இசை வாத்திய கலைஞர்களை தேர்வு செய்து, இசைக்குழு ஒன்றை புதிதாக துவக்கியுள்ளனர். மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி.,க்கு மரியாதை செலுத்தும் வகையில், 'பாடும் நிலாவுக்கு இசை அஞ்சலி' என்ற பெயரில், இசை நிகழ்ச்சி நடத்தி, சி.பி.ஏ., இசைக்குழுவை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். கோவை நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், கச்சேரி நடத்தி வக்கீல்களை மகிழ்விக்க திட்டமிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE