ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் வட இந்திய வியாபாரியிடம் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த போர்வை, கம்பளி வியாபாரி ஒருவரிடம் ராமநாதபுரம் மஞ்சன மாரியம்மன் கோயில் அருகே 6பேர் ரூ.4ஆயிரம், போர்வைகளை பறித்தனர்.இதுதொடர்பாக ஓம்சக்திநகரைச்சேர்ந்த மார்க் மைக்கேல் சாம்ராஜ் 24, ஒயிட் மணி 23, வினோத் 23 கைது செய்யப்பட்டனர். இதில் தலைமறைவாக இருந்த ஜோதிநகர் குமரகுரு 19, மகாசக்திநகர் ஜோதிமுருகன், ஓம்சக்திநகர் அஜய்குமார் 20, அருண்குமார் 21 ஆகியோரை கேணிக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE