ராமேஸ்வரம் : இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை ஜன.,13 வரை தனிமையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
டிச.,14 ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 4 படகில் இருந்த 29 மீனவர்களை, இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து காங்கேசன் துறைமுகம், இரணதீவு கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக இரு கடற் படை முகாமிலும் ஜன.,4 வரை தனிமையில் வைக்க ஊர்காவல்துறை, மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் மீனவர்களை விடுவிக்க கோரி டிச.,16 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
டிச.,30ல் மீனவர்கள் பிரச்னை குறித்து இருநாடு அதிகாரிகளிடையே பேச்சு நடந்தது. இதில் மீனவர்களை விடுவிக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் கோர்ட் வாய்தா நாளான நேற்று மீனவர்கள் 29 பேரையும் ஜன.,13 வரை தனிமையில் அடைக்க இரு நீதிமன்றமும் உத்தரவிட்டதால், மீனவர் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.----
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE