சென்னை : 'நீட்' தேர்வு மதிப்பெண் சான்றிதழை, போலியாக தயாரித்து கொடுத்தது தொடர்பாக, இடைத்தரகரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்தவர் தீக் ஷா, 18. இவர் தந்தை, பல் டாக்டர் பாலசந்திரன், 48. தலைமறைவுகடந்த, டிச.,7ல், சென்னையில் நடந்த, மருத்துவ படிப்பு சேர்க்கைக் கான கவுன்சிலிங்கில் பங்கேற்றார். அப்போது, தீக் ஷா போலி நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழை தாக்கல் செய்து, மருத்துவ கல்லுாரியில் சேர முயன்றார். இதுகுறித்து, பெரியமேடு போலீசார், ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மாணவியையும், அவரது தந்தை பாலசந்திரனையும் விசாரணைக்கு ஆஜராகும்படி, போலீசார் மூன்று முறை சம்மன் அனுப்பினர்; ஆஜராகாமல் குடும்பத்துடன் தலைமறைவாகினர்.
பெங்களூரில் பதுங்கிஇருந்த பாலசந்திரனை, இம்மாதம் 1ம் தேதி போலீசார் பிடித்து விசாரித்தனர். தீக் ஷா, நீட் தேர்வில், 27 மதிப்பெண் தான் எடுத்துள்ளார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயராம் என்ற இடைத்தரகருக்கு, 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து, நீட் தேர்வு போலி மதிப்பெண் சான்றிதழ் பெற்றதும், விசாரணையில் தெரிய வந்தது.மன அழுத்தம்மேலும், தந்தையின் அழுத்தம் காரணமாக, மாணவி மன அழுத்தத்துடன் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங்கில் பங்கேற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, பாலசந்திரனை கைது செய்து, சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்துள்ள போலீசார், இடைத்தரகர் ஜெயராம் என்பவரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE