விருதுநகர் : ''பெண்களை அடிப்பது தி.மு.க.,விற்கு கைவந்த கலை''என , அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
விருதுநகர் பி.ஆர்.சி., பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நடந்த ஆலோசனை மற்றும் வாயில் விளக்க கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்தாண்டு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ரூ.972 கோடி நிதி அறிவிக்கப்பட்டு விட்டது. கொரோனா பிரச்னை இருந்தாலும் தொழிலாளர்களை காக்கும் அரசு அ.தி.மு.க., அரசு. நீங்கள் நினைக்கும் அறிவிப்புகள் வரும். முதல்வர் பழனிசாமிக்கு கொடுக்கும் மனம் அதிகம்.அவர் அமர்ந்துள்ள நாற்காலியை தி.மு.க.,வினர் அசைக்க பார்க்கின்றனர்.
அவர் கம்பீரமாக இருக்கிறார். இதனால் ரோட்டில் இறங்கி மக்களிடம் பேசி வருகின்றனர். பெண்கள் கேள்வி கேட்டால் சண்டையிடுகிறார் ஸ்டாலின். மனுவை என்ன செய்ய போகிறீர்கள் என கேட்டதற்கு தான் கோயம்புத்துாரில் பெண் பூங்கொடி தாக்கப்பட்டார். பெண்களை அடிப்பது தி.மு.க.,விற்கு கைவந்த கலை. ஏனென்றால் ஆண்களை அடித்தால் திருப்பி அடித்துவிடுவர். இந்திராகாந்தி, ஜெயலலிதா என பெண்களை தி.மு.க.,வினர் தான் தாக்கி உள்ளனர். வில்லங்கம், வியாக்கியானம் பேசி நடத்தப்படும் கட்சிதான் தி.மு.க. அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து ஊழியர்கள் நினைத்தால் டிக்கெட் கிழித்து கொடுக்கும் போதே இரட்டை இலைக்கு ஓட்டு சேகரிக்கலாம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE