திருப்பூர்:திருப்பூரில் குடிநீர், மின் வசதி, கழிவுநீர் மேலாண்மை, சேவை மையங்கள், வர்த்தக கட்டமைப்பு உள்ளிட்டவைகளை மேம்படுத்தும் வகையில் 'ஸ்மார்ட் சிட்டி' மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஆனால், ஆங்காங்கே, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, மந்தமாக நடப்பதால் போக்குவரத்து மாற்றம் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.இதனால், மக்கள் தினமும் பாதிப்படைகின்றனர். அவ்வகையில், ஜெய்வாபாய் பள்ளி அருகே மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டும், ரோட்டில் சீரமைப்பு பணி முடிக்கப்படாமல் உள்ளது. இதேபோல், பல பகுதிகளில், பணிகள் முடிக்கப்பட்டு, ரோட்டோரத்தில் உள்ள மண் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், போக்குவரத்தில் தடை ஏற்பட்டு, குறிப்பிட்ட ஒரு வழித்தடத்தில் வாகனங்களை இயக்க வேண்டியுள்ளது.அதன்படி, ஒட்டு மொத்த நகர போக்குவரத்தும் மாறும் நிலை ஏற்படுகிறது. நகரில், ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்நிலையில், மந்தமாக நடக்கும் பணியால் மேலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.எனவே, ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விரைவாக முடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE