பல்லடம்:பல்லடம் அடுத்த கரடிவாவி -- அனுப்பட்டி செல்லும் ரோட்டில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளன.கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பலர், அனுப்பட்டி செல்லும் இந்த ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர். அனுப்பட்டி பிரிவில் ரோட்டின் நடுவே பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், தடுமாறியபடி சென்று வருகின்றனர்.தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பள்ளத்தில் தண்ணீர் பெருகி நின்றுள்ளது. இரவு நேரங்களில், வெளிச்சமின்மை காரணமாகவாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. விபத்து ஏற்படும் முன் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE