ஊட்டி;'மஞ்சகம்பை கோவிலில் சேதமான ஐயப்பன் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும்,' என, ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.ஹிந்து முன்னணி, கோவை கோட்ட செயலாளர் மஞ்சுநாத் அறிக்கை:மஞ்சூர் அருகே உள்ள, மஞ்சகம்பை கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள சுவாமி ஐயப்பன் சிலை மாடு தள்ளியதில் சேதமடைந்தது. இரண்டு ஆண்டுகள் ஆகியும் சீரமைக்க வில்லை. அங்குள்ள சன்னதியில் ஐயப்பன் சிலை இல்லாததால், பக்தர்கள் வழிபாடு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, ஐயப்பன் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE