வால்பாறை:தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக, 500 ரூபாய் வழங்க வேண்டும் என, கொ.ம.தே.க., கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.வால்பாறையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நகர செயலாளர் அன்பழகன் தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட செயலாளர் நித்யானந்தம், மாநில விவசாய அணி செயலாளர் கோபால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:வால்பாறை அரசு மருத்துவமனையை துணை தலைமை மருத்துவமனையாகவும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாகவும் மாற்ற வேண்டும். தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்க, தேயிலை அல்லாத மாற்றுத்தொழில் வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.வனவிலங்கு தாக்கி உயிரிழப்பவர்களுக்கு நஷ்ட ஈடாக, 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக, 500 ரூபாய் வழங்க வேண்டும்.இவையுள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE