புதுடில்லி :புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டும் திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதில், இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
மத்திய அரசின், மத்திய விஸ்தா திட்டத்தின் கீழ், முக்கோண வடிவிலான புதிய பார்லிமென்ட் கட்டடம், தற்போதுள்ள பார்லிமென்ட் கட்டடத்திற்கு அருகிலேயே கட்டமைக்கப்பட உள்ளது. 2022ம் ஆண்டிற்குள், அந்த புதிய பார்லிமென்ட் கட்டிமுடிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, இந்த திட்டத்திற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
![]()
|
இதற்கிடையே, இந்த திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்ட, கடந்த டிசம்பர், 7ம் தேதி, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.எனினும், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை, கட்டுமானம் மற்றும் தகர்ப்பு பணிகள் துவக்கப்படாது என, மத்திய அரசிடம் இருந்து வாக்குறுதி பெற்றது.இந்நிலையில், மத்திய விஸ்தா திட்டத்திற்கு எதிரான வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இன்று தீர்ப்பு வழங்க உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE