பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே, தமிழக நாயுடு பேரவை ஆலோசனை கூட்டம் நடந்தது.மாநில தலைவர் குணசேகரன் பேசுகையில், ''வரும் சட்டசபை தேர்தலில், எங்களது சமூகத்திற்கு உரிய மரியாதை அளித்து, சட்டமன்ற தேர்தலில் உரிய சீட் வழங்கும் கட்சிகளுக்கு ஆதரவு வழங்கப்படும்; தகுதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.மாநில ஒருங்கிணைப்பாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார்.மாற்றுத்திறனாளிகள் பிரிவு மாநில செயலாளர் கருணாகரன், மாநில பொது செயலாளர் பாலாஜி, மாநில பொருளாளர் சுரேஷ் மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் அரவிந்த பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE