மேட்டுப்பாளையம்:சிறுமுகை அருகே, தந்தையும், மகளும் விஷமருந்திய நிலையில், மகள் பலியானார். தந்தை சிகிச்சை பெற்று வருகிறார்.சிறுமுகையை அடுத்த வையாளிபாளையத்தை சேர்ந்தவர் மணக்கான், 65. மனைவி பழனியம்மாள் 65. இவர்களின் இளைய மகள் ராணி, 35. மாற்றுத் திறனாளி. பழனியம்மாள், கடந்த ஓராண்டுக்கு முன் இறந்து விட்டார். தந்தையும், மகளும் தனியாக வசித்து வந்தனர். மணக்கானுக்கு நடக்க முடியாத நிலையில் அவதிப்பட்டு வந்தார்.இந்நிலையில், இவர்கள் விஷமருந்திய நிலையில், அருகில் இருந்தவர்கள், அன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், ராணி சிகிச்சை பலனின்றி பலியானார். மணக்கான் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE