திருப்பதி : ஆந்திரா காவல்துறையில், போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி, ஐ.பி.எஸ்., போலீஸ் டி.எஸ்.பி.,யாக, பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், திருப்பதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, ஜெஸ்ஸி பிரசாந்தி சமீபத்தில் திருப்பதி வந்தார். அப்போது பணியில் இருந்த அவரது தந்தை ஷியாம் சுந்தர், மூத்த அதிகாரி என்ற அடிப்படையில், மகளுக்கு சல்யூட் அடித்தார். இந்த புகைப்படத்தை, ஆந்திர போலீசார், தங்கள் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த சம்பவம், பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ------------------------------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE