திருப்பூர்:காங்., முன்னாள் தலைவர் ராகுல், வரும் 22ல், கோவை மற்றும் திருப்பூரில் தொழில்துறையினருடன் கலந்துரையாடுகிறார்.திருப்பூர் மாநகர மாவட்ட காங்., அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின், மாநகர தலைவர் கிருஷ்ணன் கூறுகையில், ''பொங்கல் பண்டிகைக்கு பின், ராகுல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். வரும் 22ம் தேதி கோவை வரும் ராகுல், தொழில்துறையினருடன் கலந்துரையாடுகிறார். பின், திருப்பூரில் நடக்கும் நிகழ்ச்சியில் தொழில் துறையினருடன் கலந்துரையாடுகிறார். கட்சி நிர்வாகிகளை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிகிறார்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE