திருப்பூர்:''அடுத்த ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சி தொடர்ந்தால், பொங்கலுக்கு, 5,000 ரூபாய் வழங்கப்படும்'' என்று, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.திருப்பூரில், ரேஷன் கார்டுதாரருக்கு, 2,500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கி, பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:எம்.ஜி.ஆர்., ஆட்சியில் பொங்கலுக்கு, இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஜெயலலிதா ஆட்சியில் வேட்டி, சேலையுடன் பொங்கலிட அரிசி, வெல்லம், கரும்பு போன்றவற்றுடன், 100 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.தற்போது, முதல்வர் பழனிசாமி ஆட்சியில், பொங்கல் தொகுப்புடன் 2,500 ரூபாய் வழங்கப்படுகிறது. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பதுபோல், பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஆட்சி தொடர்ந்தால், பொங்கலுக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE