திருப்பூர்:பொங்கல் பரிசாக வழங்கிய, 2,500 ரூபாயை, ஆனைமலையாறு - நல்லாறு திட்ட நிதியாக, விவசாயிகள் கலெக்டரிடம் வழங்கினர்.பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின்(பி.ஏ.பி.,) உண்மையான நோக்கம் நிறைவேற வேண்டுமெனில், ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, விவசாயிகளிடம் வலுத்து வருகிறது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று, 12 விவசாயிகள், தமிழக அரசு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கிய, 2,500 ரூபாயை, இத்திட்டத்திற்கான நிதியாக வழங்கினர்.விவசாயிகள் கூறுகையில், 'பி.ஏ.பி., திட்டத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, 15 நாட்கள் மட்டுமே, பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கிறது. இதேநிலை நீடித்தால் தமிழக விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகும். கோவை - திருப்பூர் மாவட்ட விவசாயிகள் நலன் கருதி, ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். பொங்கல் பரிசாக அரசு வழங்கிய, 2,500 ரூபாயை, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளோம்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE