திருப்பூர்:தி.மு.க.,வினர், கந்தபுராண பாடல் வரிகளை மாற்றி, தேர்தல் பிரசார பாடலாக மாற்றியதற்கு, கண்டனங்கள் எழுந்துவருகின்றன.திருப்பூர் திருக்கோவில் ஆன்மிக பேரவை அமைப்பாளர் ராமகிருஷ்ணன் அறிக்கை:ஆன்மிக நம்பிக்கை கொண்ட, பெரும்பாலான ஹிந்து சமுதாய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களுக்கு பிடிக்காத ஆன்மிக நெறிகொண்ட பாடல் வரிகளை எதற்காக பயன்படுத்த வேண்டும் என கோபம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க.,வின் அடாவடி செயலுக்கு, கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.ஆன்மிகவாதிகளை புண்படுத்திய இத்தகைய குற்றத்துக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இப்பாடல் வரியை தேர்தலில் பயன்படுத்தினால், பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, தேர்தல் கமிஷனில் முறையிடுவோம். கட்சி பொதுக்கூட்டத்தை முற்றுகையிட்டு, அறவழியில் போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE