திருப்பூர்:திரையரங்குகளில், 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, பொங்கல் பண்டிகையில் இருந்து, மாநிலத்தில் உள்ள, அனைத்து திரையரங்குகளும், முழுமையாக செயல்பட உள்ளன.கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில், ஒன்பது மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள், நவ., 10ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. அதேநேரம், 50 சதவீத இருக்கைகளுடன் இயங்குவதற்கு மட்டுமே அரசு அனுமதியளித்தது.திரையரங்குகளில், 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கோரி, திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், திரையரங்குகள், 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழ்நாடு திரையரங்குகள் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம் கூறுகையில், ''கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் திரையரங்குகள் செயல்பட்டு வந்தன. ஆனால், ரசிகர்கள் வருகை குறைவால், சில திரையரங்குகள் மூடியே இருந்தன. தற்போது, 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. பொங்கல் பண்டிகை முதல், தமிழகத்தில் உள்ள, 1,112 திரையரங்குகளும், முழுமையாக செயல்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE