கவுஹாத்தி : அசாமில் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக பள்ளிக்குச் செல்லும் மாணவியருக்கு ஊக்கத்தொகையாக ஒரு நாளுக்கு 100 ரூபாய் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அசாமில் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு பிளஸ் 2 வகுப்பில் முதல் நிலையில் தேர்ச்சி பெறும் மாணவியருக்கு மாநில அரசு இருசக்கர வாகனங்களை வழங்கி ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் பள்ளி மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மாநில கல்வித் துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது: பள்ளிக்கு செல்லும் மாணவியருக்கு ஊக்கத்தொகையாக ஒரு நாளுக்கு 100 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதேபோல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பை பயிலும் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் புத்தகம் உள்ளிட்ட படிப்பு சார்ந்த பொருட்களை வாங்குவதற்காக 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை 'டிபாசிட்' செய்யப்படும்.இவ்வாறு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE