பண்ருட்டி - பண்ருட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள சாலை பள்ளம், படுகுழியாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.சென்னை - கும்பகோணம் சாலையில் முக்கிய பகுதியாக இருப்பது பண்ருட்டி - வடலுார் சாலை. இந்த சாலை வழியே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.இந்த சாலையில் கெடிலம் ஆற்றின் மீதுள்ள உயர் மட்ட பாலம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது.இங்கு தினமும் நுாற்றுக்கணக்கானோர் ஓட்டுனர் உரிமம், வாகன உரிமம் புதுப்பிப்பு உட்பட பல்வேறு அலுவல்களுக்காக வருகின்றனர்.இந்த அலுவலகம் எதிரே உள்ள சாலை சேதமடைந்து மெகா சைஸ் பள்ளங்கள் உள்ளன. இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.எனவே சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE