காட்டுமன்னார்கோவில் - கடலுார் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் லால்பேட்டையில் நடந்தது.கூட்டத்திற்கு, த.மு.மு.க., முன்னாள் மாவட்டத் தலைவர் அப்துல் சமது தலைமை தாங்கினார். நகர தலைவர் அப்துல் அலீம் வரவேற்றார். இஸ்லாமிய பிரசார பேரவை நிர்வாகி முகமது இர்பான் துவக்கி வைத்தார்.கூட்டத்தில், மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது, அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஜெய்னுால் அபிதீன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.கூட்டத்தில், தெற்கு மாவட்ட மாவட்டத் தலைவராக முகமது ஹாரீஸ் தேர்வு செய்யப்பட்டார். த.மு.மு.க., செயலாளராக முகமது அஸ்லம், ம.ம.க., செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ., ஆயங்குடி அப்துல் நாசர், பொருளாளராக ஆடூர் நசீர் அகமது தேர்வு செய்யப்பட்டனர்.நிகழ்ச்சியில், நிர்வாகிகள் மவ்லவி முகமது அன்சாரி, நுாருல் அமீன், முகமது பைசல், முகமது அலி, ஜசூர் அகமது சபிகூர் ரகுமான் உட்பட பலர் பங்கேற்றனர்.முன்னாள் நகர செயலாளர் கியாசுதீன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE