நெல்லிக்குப்பம் - நெல்லிக்குப்பம் நகராட்சியில் பழுதாகி காட்சிப் பொருளாக உள்ள தானியங்கி கிருமி நாசினி வழங்கும் இயந்திரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா தொற்று காரணமாக நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு துாய்மைப் பணியாளர் மூலம் கிருமிநாசினி வழங்கப்பட்டு வந்தது.இதற்காக ஒரு நபர் பணிபுரிவதைத் தவிர்க்க, தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் வாங்கப்பட்டது.நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் பொருத்தப்பட்டு, இயந்திரத்தின் கீழ் கையை காண்பித்தால் தானாகவே குறிப்பிட்ட அளவுக்கு கிருமி நாசினி வரும்.இந்த இயந்திரம் ஒரு சில நாட்கள் மட்டுமே வேலை செய்தது. அதன்பிறகு இயந்திரம் பழுதானது.இயந்திரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால், கிருமி நாசினி வழங்கும் இயந்திரம் காட்சிப் பொருளாக உள்ளது.கொரோனா தொற்று அச்சம் இன்னமும் நீங்காத நிலை உள்ளது. எனவே, அதிகாரிகள், பழுதான கிருமி நாசினி இயந்திரத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE