பண்ருட்டி - பண்ருட்டியில் பிராமணர் சங்க ஆண்டு விழா, மாநிலத் தலைவருக்கு பாராட்டு, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குதல் என முப்பெரும் விழா நடந்தது.தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் நடந்த முப்பெரும் விழாவிற்கு, பண்ருட்டி கிளைத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் அருணாசலம் முன்னிலை வகித்தார்.விழாவில், மாநிலத் தலைவர் நாராயணன் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி, பாராட்டி பேசினார்.மாநில துணைத் தலைவர் திருமலை உட்பட கிளை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE