நெல்லிக்குப்பம் - நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.வங்கித் தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி துவக்கி வைத்தார்.இந்த சங்கத்திற்குட்பட்ட 4 கடைகளில் பொங்கல் பரிசாக 3,000 குடும்பங்களுக்கு 75 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.விழாவில் அண்ணாகிராமம் ஒன்றிய தலைவர் ஜானகிராமன் அ.தி.மு.க., நகர செயலாளர் சவுந்தர், வங்கி துணைத் தலைவர் அன்புராஜ், இயக்குனர்கள் பிரபாகரன், சுப்ரமணி, ஏழுமலை, மணவாளன், ராமு, ராஜாங்கம், வனிதா, வரலட்சுமி, சுபா உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE