நடுவீரப்பட்டு - பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு சாலையின் வழியாக சுற்றுப் பகுதியைச் சேர்ந்த கீழ்மாம்பட்டு, புதுப்பாளையம், நெல்லித்தோப்பு, சி.என்.பாளையம், சிலம்பிநாதன்பேட்டை உட்பட பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தினமும் பண்ருட்டிக்கு இந்த சாலை வழியாக வந்து செல்கின்றனர்.ஆனால், இந்த தார்சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் அருகே உள்ள வீடுகளில் தெறிப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, அதிகாரிகள் சாலையை சரிசெய்திட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE