ஸ்ரீமுஷ்ணம் - ஸ்ரீமுஷ்ணம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலப்பாலையூர் ஊராட்சித் தலைவர் விருத்தகிரி, கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:எங்கள் பகுதியில் விளைந்த நெற்பயிர்களை தனியார் வியாபாரிகள் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கொள்முதல் செய்வதில்லை.விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியிலும் போதிய விலை கிடைக்கவில்லை.எனவே, விவசாயிகளின் நலன் கருதி பொங்கல் பண்டிகைக்குள் மேலப்பாலையூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE