மந்தாரக்குப்பம் - வடலுாரில் சன்மார்க்க பொதுக்கூட்டம் நடந்தது.சுந்தர மகாலிங்க சுவாமிகள் தலைமை தாங்கினார். டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன் முன்னிலை வகித்தார். வள்ளலார் கொள்கை பரப்பு மன்ற தலைவர் கண்ணதாசன் வரவேற்றார்.கூட்டத்தில், வடலுார் நகரை புனித நகரமாக்க வேண்டும். மது, மாமிசக் கடைகளை அகற்ற வேண்டும். வரும் தைப்பூசத்தில், சன்மார்க்க அன்பர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நெய்வேலி ஆனந்தன், ஜோதி பிரசாத், கிேஷார்குமார், சிற்றரசு, முருகன், பிரசாத், முருகன், பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE