கடலுார் - கடலுாரில் தி.மு.க., சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது.கடலுார் ஒன்றியம், பாதிரிக்குப்பம் ஊராட்சியில் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார்.கூட்டத்தில் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் கணேசன், சபா ராஜேந்திரன், சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், புகழேந்தி, மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு, முன்னாள் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், வி.ஆர்., அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், விவசாய அணி அமைப்பாளர் வெங்கடேஷ், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், வாஞ்சிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE