மயங்கி விழுந்த சிறுமி பலிகனகம்மாசத்திரம்: திருவள்ளூர் அடுத்த, மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளன் மகள் வித்யா, 17. இவர், கடந்த மாதம், 25ம் தேதி இரவு, மீன் குழம்பு சாப்பிட்டவுடன், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று அதிகாலையில் இறந்தார். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.கஞ்சா கடத்தியவர்கள் கைதுகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த, இரு தமிழக அரசு பஸ்களில், போலீசார் சோதனை நடத்தினர்.அதில், ஆறு பைகளில், 50 கிலோ எடை கஞ்சா சிக்கியது. அதை கடத்திய திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அசாருதீன், 30, சதாம் உசேன், 29, ரவி, 35, மணிகண்டன், 28, ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த ரத்தினராஜ், 40, சத்தியவாணி, 26, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE