சின்னாளபட்டி : அம்பாத்துறையில் வேலை உறுதித்திட்ட பயனாளிகளை தி.மு.க., கூட்டத்திற்கு செல்ல அனுமதித்த பணித் தள பொறுப்பாளரை அதிகாரிகள் அதில் இருந்து விடுவித்தனர்.
ஆத்துார் ஒன்றியம் அம்பாத்துறையில் தி.மு.க.,வின் மக்கள்சபைக் கூட்டம் நடந்தது. அப்பகுதியில் வேலை உறுதிப்பணிக்கு வந்த பயனாளிகளை அழைத்துச் செல்வதாக மாவட்ட நிர்வாகத்திடம் சிலர் புகார் செய்தனர். பி.டி.ஓ., விஜயலட்சுமி அங்கு சென்று ஆய்வு செய்தார்.பணிக்கு வந்திருந்த 141 பயனாளிகளில் 112 பேர் அங்கு இல்லை. சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு 'ஆப்சென்ட்' பதிவு செய்தனர்.
இப்பிரச்னையில் பணித்தள பொறுப்பாளரை மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.பி.டி.ஓ., கூறுகையில், ''அம்பாத்துறையில் விதிமீறி பயனாளிகளை அனுப்பிய புகாரில் பணி தள பொறுப்பாளர் பாப்பாத்தி விடுவிக்கப்பட்டார். இத்திட்ட பணியாளாக வேலைக்கு வரலாம். மற்றொரு பயனாளி பொறுப்பாளராக நியமிக்கப்படுவார்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE