திண்டுக்கல் : 'திண்டுக்கல்லில் 6.40 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது'என, அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல் பொன்சீனிவாசன் நகரில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி, அமைச்சர் சீனிவாசன் பேசியதாவது: பொங்கலை சிறப்பாக கொண்டாட திண்டுக்கல்லில் 6 லட்சத்து 40 ஆயிரத்து 35 கார்டுதாரர்களுக்கு ரூ.160 கோடிக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. சுழற்சி முறையில் தினமும் 200 பேருக்கு வழங்கப்படும். மக்கள் நலனுக்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசுக்கு மக்கள் ஆதரவை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கலெக்டர் விஜயலட்சுமி, டி.ஆர்.ஓ., கோவிந்தராசு, முன்னாள் மேயர் மருதராஜ், கூட்டுறவு இணைப்பதிவாளர் முருகேசன், துணைப் பதிவாளர் கணேசன், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன், துணைத் தலைவர் ராஜன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜமோகன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE