சூளைமேடு; சூளைமேடில், துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு, கடை உரிமையாளரின் மகன் தான் காரணம் என, வாடகைதாரர் புகார் அளித்துள்ளார்.சூளைமேடு, நீலகண்டன்தெருவைச் சேர்ந்தவர் பெட்ராம் ஸ்வாரிஸ், 53. இவர், சவுராஷ்டிரா நகர், ஒன்றாவது தெருவில், வாடகைக்கு கடை எடுத்து, துணி வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று அதிகாலை, திடீரென துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர்.விபத்தில், கடையில் இருந்த துணிகள் அனைத்தும் தீக்கிரையாகின. இந்த சம்பவத்திற்கு, 'கடையின் உரிமையாளர் சாகுல் ஹமீதின் மகன் தான் காரணம்' என, பெட்ராம் ஸ்வாரிஸ், சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE