திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் டிச., 31 ல் காப்பு கட்டுடன் துவங்கி நேற்று நிறைவுற்றது.
உற்ஸவ நாட்களில் தினமும் தெய்வானை மட்டும் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்தை மூன்று முறை வலம் சென்று திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். மூலிகை எண்ணெய் சாத்துப்படி செய்யப்பட்டு அம்மனின் கீரிடத்தில் கருமுடி சாத்துப்படியாகி, வெள்ளி சீப்பால் தலைவாருதல், தங்க ஊசி மூலம் பல் துலக்குதல், மை இட்டு கண்ணாடி பார்க்கும் நிகழ்ச்சிகள் மற்றும் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு மூலிகை எண்ணெய் பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று நிறைவு விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் முடிந்து அம்மன் கோயிலுக்குள் புறப்பாடானார். கொரோனா தடையுத்தரவால் பூ பல்லக்கு ரத்தானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE