மதுரை : மதுரையில் டி.ஆர்.பி., தேர்வில் தேர்ச்சி பெற்ற 36 பேருக்கு அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுனர்கள் நியமனத்திற்கான கலந்தாய்வு சி.இ.ஓ., சுவாமிநாதன் தலைமையில் நடந்தது.
மாவட்டத்திற்குள் காலியாக இருந்த 26 பணியிடங்களை அவர்கள் தேர்வு செய்தனர். மற்றவர்கள் பிற மாவட்ட காலியிடங்களை தேர்வு செய்தனர். அவர்களுக்கு கலந்தாய்வு நியமன உத்தரவுகளை சி.இ.ஓ., வழங்கினார். டி.இ.ஓ.,க்கள் முத்தையா, பங்கஜம் இந்திராணி, வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கண்காணிப்பாளர் முத்துராஜ், சி.இ.ஒ., நேர்முக உதவியாளர் சின்னதுரை கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE