உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடந்தது.கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேஷ் வரவேற்றார். கலெக்டர் அன்பழகன்தலைமை வகித்தார். அமைச்சர் உதயகுமார், எம்.எல்.ஏ., நீதிபதி பரிசுத் தொகுப்பை வழங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, ஆர்.டி.ஓ., ராஜ்குமார், தாசில்தார் விஜயலட்சுமி, அ.தி.மு.க., செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் ராஜா, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் ரகு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன், சேடபட்டி நிர்வாகி துரைதனராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE