புதுடில்லி: இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த டிசம்பர் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், 68 ஆயிரத்து, 558 கோடி ரூபாயை, இந்திய மூலதன சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களாகவே, தொடர்ந்து அன்னிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் இந்திய சந்தைகளில் முதலீட்டை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த டிசம்பரில் மட்டும், அன்னிய முதலீட்டாளர்கள், பங்குகளில், 62 ஆயிரத்து, 16 கோடி ரூபாயையும்; கடன் பத்திரங்களில், 6,542 கோடி ரூபாயையும் முதலீடு செய்துள்ளனர். மொத்தம் மேற்கொண்ட முதலீட்டு தொகை, 68 ஆயிரத்து, 558 கோடி ரூபாய். கடந்த நவம்பர் மாதத்தில், மொத்தம், 60 ஆயிரத்து, 358 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருவதால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. தற்போது, கொரோனாவுக்கு தடுப்பூசிகள் வெற்றிகரமாக வரத் துவங்கி விட்டதை அடுத்து, பொருளாதார செயல்பாடுகளில் அதிக நம்பிக்கை ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சந்தைகளில் முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE