ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் புதிதாக பெறப்பட்ட, 38 ஆயிரம் வாக்காளர் படிவங்கள் மீதான விசாரணை, நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த, நவ., 16ல் வெளியிடப்பட்டது. இதையடுத்து அன்று முதல் வாக்காளர் சேர்க்கை படிவங்கள் பெறப்பட்டது. நான்கு கட்ட வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமும் நடந்தது. இதுகுறித்து, தேர்தல் பிரிவினர் கூறியதாவது: சிறப்பு முகாம் மற்றும் ஆன்லைனில், 38 ஆயிரம் படிவங்கள் வரப்பெற்றுள்ளன. இதில், பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்த படிவங்கள், அந்தந்த பகுதி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விசாரிக்கப்படுகிறது. இம்முறை, அதிக அளவில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு, இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவ்வாறு, 2,000 படிவங்கள் உள்ளன. அவை நீங்கலாக மற்ற படிவங்களின் விசாரணை, நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில், பெயர் இணைக்கப்பட்டு, திருத்தம் செய்யப்பட்டு இருக்கும். தவிர ஆன்லைனில் பலரும், விண்ணப்பித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE