அம்மாபேட்டை: அம்மாபேட்டை அருகே, குவாரிக்குள் டிப்பர் லாரி கவிழ்ந்ததில், டிரைவர் பலியானார். அம்மாபேட்டை அருகே, படவல்கால்வாய் வீதியை சேர்ந்தவர் தங்கப்பன், 50; அந்தோணிபுரத்தில் தனியார் கிரசர் நிறுவன டிப்பர் லாரி டிரைவர். நேற்று காலை, 12:45 மணியளவில், குவாரிக்குள் லாரியை ஓட்டிச்சென்ற போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் லாரியின் அடியில் சிக்கி சம்பவ இடத்தில் பலியானார். அம்மாபேட்டை போலீசார், அவர் உடலை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பலியான தங்கப்பனுக்கு, மனைவி, ஒரு மகன் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE