மேட்டூர்: மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ்., மற்றும் மேச்சேரி துணை மின் நிலையங்களில், பராமரிப்பு பணி காரணமாக, நாளை மின்தடை செய்யப்படுகிறது. மின்வாரிய மேட்டூர் கோட்ட செயற்பொறியாளர் சாந்தி விடுத்துள்ள அறிக்கை: மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ்., மற்றும் மேச்சேரி துணை மின் நிலைய பராமரிப்பு பணிக்காக, அதன் எல்லைக்கு உட்பட்ட நகர், கிராமபுறங்களில் இன்று (ஜன.,5)மின்தடை செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சேலம் கலெக்டர் உத்தரவுபடி நாளை (ஜன.,6) மூன்று துணை மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணி நடப்பதால் காலை, 9:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE