ஓமலூர்: காடையாம்பட்டி ஒன்றியம், செம்மாண்டப்பட்டியில், கடந்த, 1ல், இரவு ரயில்வே பாலத்தில், இரு சமூகத்தினரிடையே வாய் தகராறு ஏற்பட்டு, கட்டை, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இரு தரப்பினர் மீதும், ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இது தொடர்பாக இதுவரை, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று, செம்மாண்டப்பட்டி பழையூரை சேர்ந்த செல்லத்துரை மகன் விக்னேஷ், 21, அதே பகுதியை சேர்ந்த அருள், 24, ஆகிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE